(எம்.ஆர்.எம்.வசீம்)
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கும் பிரதான 3 குழுக்களைத் தவிர, வேறு எந்த நபரையும் தனிமைப்படுத்த அல்லது நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்துவதற்கான பரிந்துரைகளை பொது சுகாதார அதிகாரிகள் வழங்காது என இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை பொது சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கமையவே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு திறக்கப்படுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதான ஆர்ப்பாட்டங்கள் இரண்டு இடம்பெற்றிருந்தன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கொம்பனி தெருவில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தது.
அதேபோன்று பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்யதிருந்தனர்.
அவர்கள் நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
குறிப்பாக கொம்பனி தெரு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க கொம்பனி தெரு பிரதேச பொது சுகாதார அதிகாரி பரிந்துரை செய்திருக்கின்றார். என்றாலும் அந்த இடத்தில் பொது சுகாதார அதிகாரிகள் எந்தவையிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.
அதேபோன்று பாராளுமன்ற சுற்று வட்டாரத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்க தலைவர் உட்பட உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தவும் தனிமைப்படுத்தவும் தேவையான பரிந்துரையை பத்தரமுல்ல சுகாதார அதிகாரியின் ஆலாேசனைக்கமைய பத்தரமுல்ல பொது சுகாதார அதிகாரி செய்திருக்கின்றார் என்பது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
எவ்வாறு இருந்தாலும் இந்த இரண்டு சம்பவங்களினாலும் சட்டம் மற்றும் ஒழுக்க பிரச்சினை ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
நீதிமன்ற தீர்ப்புகளின் பிரகாரம் நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம். என்றாலும் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் கட்டளைச்சட்டத்தின் கீழ் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் ஆலாேசனை வழங்கப்பட்டிருக்கும் பிரதான 3 குழுக்களை தவிர, வேறு எந்த நபரையும் தனிமைப்படுத்தவோ அல்லது நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தவோ எந்தவித பரிந்துரையையும் பொலிஸ் திணைக்களத்துக்கோ அல்லது வேறு திணைக்களங்களுக்கோ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டாம் என அனைத்து பொது சுகாதார அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கின்றோம்.
அத்துடன் ஏதாவது சட்ட மீறல்கள் ஏற்படுமாக இருந்தால், அதுதொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொது சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM