பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் ஆரம்பம் 

Published By: Digital Desk 2

13 Jul, 2021 | 10:28 AM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று காலை பாரம்பரிய  முறைப்படி ஆக்கிரமிப்புக்குள்ளாகிவரும் எல்லைக்கிராமத்தில் உள்ள  கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் ஆலய வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி பிரதேச செயலகத்தினால் இம்முறை 10 பேர் மாத்திரமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போது நாட்டில் 150 பேர் வரை நிகழ்வுகளில் பங்குபற்ற அனுமதி இருப்பினும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களோடு ஆலய உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

அதிகாலை 3 மணியளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு பொங்கல் உட்சவம் ஆரம்பமாகியுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08