இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போது பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் குறித்த சந்தேகநபர் தொடர்புபட்டிருப்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரின் பெயர் சுதன் சுப்பய்யா என்பதுடன், 2005ம் ஆண்டு வரை மாரிமுத்து என்ற பெயரில் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக தற்காலிக விசாயொன்றை வழங்குமாறு பூனே பொலிஸார் இலங்கை தூதுவராலயத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்படி அடுத்த வாரமளவில் குறித்த நபர் நாடு கடத்தப்படலாம் என்று இந்திய ஊடக செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM