அரசியல் சதுரங்க விளையாட்டை ஆரம்பித்தார் ‘சணக்கியன்’ பஷில்

Published By: Digital Desk 2

12 Jul, 2021 | 05:26 PM
image

நமது அரசியல் நிருபர்

கடந்த ஒன்பதாம் திகதி ஆளும் பொதுஜனபெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்றஉறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட பஷில் ராஜபக்ஷ அன்றைய தினமே நிதி அமைச்சராகவும் பதவிஏற்றுக்கொண்டார். 

அவர் அமைச்சுப்பதவியை ஏற்பதற்கு முன்னதாக மூத்த சகோதரரான பிரதமர் மஹிந்தராஜபக்ஷவிடத்தில் ஆசீர்வாதம் பெற்றதோடு அவருடனே சென்று மற்றொரு மூத்த சகோதரரான ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் அமைச்சுப்பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வு ராஜபக்ஷ குடும்பத்திற்குள் அதிகாரத்திற்காக ‘அணிவகுத்து’முட்டுப்பட்டார்கள் என்று கடந்த காலத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த சர்ச்சைகளுக்கும்,பிரசாரங்களுக்கும் முற்றுப்புள்ளியை வைத்திருக்கின்றது.

இவ்வாறிருக்க, தற்போது பொருளாதாரத்தினை சீராக்கும் விடயத்தில், முதல்நடவடிக்கையாக உடனடியாகச் செலுத்த வேண்டியுள்ள ஒரு பில்லியன் வரையிலான கடன் தொகையை மீளச்செலுத்துவதற்கான உபாயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருக்கின்றார். 

அதேநேரம், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அதற்குச் சமாந்தரமாக, அரசியல் நகர்வுகள்சிலவற்றையும் ஆரம்பித்திருக்கின்றார். அதன் எதிரொலியாக சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தயாசிறி உள்ளிட்டவர்கள்நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், சிரேஷ்டத்துவம் வாய்ந்தவர்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்தும்இருக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்திருக்கின்றார்கள். 

சுதந்திரக்கட்சிக்குள் காணப்படும் இத்தகைய இருவேறு நிலைப்பாடுகள் காலவோட்டத்தில்கட்சியை இருகூறாக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அதன் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.அதேநேரம், அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள சிரேஷ்டஉறுப்பினர்கள் பஷில் என்ற தனி நபர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே காரணம் என்றும்அந்த முக்கியஸ்தர் கூறியுள்ளார். 

அவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஆகிய கட்சிகளில் இருபதாம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்த உறுப்பினர்கள் பஷிலுடன்‘இணைந்து’ பணியாற்றுவது பற்றி ஆரம்பப் பேச்சுக்களை தொடங்கியிருக்கின்றார்கள். இந்தநிலைமையும் கூட எதிர்காலத்தில் அக்கட்சிகளை கூறுபோடுவதற்கான முதற்கட்டமாகவே உள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04