(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸின் திரிபான டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இன்றைய (திங்கட்கிழமை) தினத்திலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் 96 மாதிரிகளை அடிப்படையாகக்கொண்டு மேற்படி பரிசோதனைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மாதிரிகள் எழுந்தமானமான அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு, மேற்படி டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளை எதிர்வரும் ஒருவாரகாலத்திற்குள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுகாதாரப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 இற்கும் அதிகமானோர் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டிருக்கும் அதேவேளை, அவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM