சிவலிங்கம் சிவகுமாரன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட் சம்பளம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்ட நாளிலிருந்து பல தோட்டப்பகுதிகளில்சர்ச்சைகளும் தொழிலாளர் போராட்டங்களும் ஆரம்பித்து விட்டன.
சம்பள நிர்ணய சபையின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்றும் அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் வழக்கு தொடர்ந்தாலும் அவர்களின்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் கூறி விட்டது.
அதன்படி வர்த்தமானி அறிவிப்பின் கீழ் அவை அத்தொகையைவழங்க ஆரம்பித்தன. எனினும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதன் காரணமாகதீர்ப்பு வரும் வரை கம்பனிகள் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும்.
எனினும் அதற்கு இசைந்து கொடுக்காத சில கம்பனிகள் தொழிலாளர்களின் கொழுந்து எடையை அதிகரித்து நாளொன்றுக்கு20 கிலோ எடுத்தாலே ஆயிரம் ரூபாவழங்க முடியும் என்ற கெடுபிடிகளைஏற்படுத்தி வருகின்றன.
சில தோட்ட நிர்வாகங்கள் இது குறித்து எழுத்து மூலமாகவேஅறிவித்திருக்கின்றன. 20 கிலோவுக்கு குறைவாக எடுக்கும் தொழிலாளர்களுக்கு 700 ரூபாவிலிருந்து800 வரையான நாட்சம்பளமே வழங்கப்படுகின்றன.
ஆனால் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவைபெற்றுக்கொடுத்து விட்டோம் என பட்டாசுகள் கொழுத்தி கேக் வேட்டி பாற்சோறு விநியோகித்தவர்களைதற்போது காண முடியாதுள்ளது. கூட்டு ஒப்பந்தம் இல்லை என்று கம்பனிகள் கூறினாலும் தொழில்சட்டங்கள் அங்கு உள்ளன.
அப்படியானால் தொழிலாளர்களின் நலன் சார்ந்த புதிய கூட்டுஒப்பந்தம் ஒன்றுக்கு ஏன் இவர்களால் போக முடியாது என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அதைவிடுத்து பார்த்தாலும் தொழில் பிணக்கு சட்டங்கள்மூலம் இதற்கு இலகுவாக தீர்வு காண முடியும் என்று உறுதிப் பட தெரிவித்திருக்கிறார் சட்டத்தரணிஇ.தம்பையா.
ஆனால் அதற்கும் ஏன் இந்த தொழிற்சங்கங்கள் பின்னிற்கின்றனஎன்பது தெரியவில்லை. தொழிலாளர்களுக்கு இந்த விவகாரத்தில் தீர்வை தரும் விடயங்கள் தம்மத்தியிலிருந்துமட்டுமே வர வேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM