சி.அ.யோதிலிங்கம்
தமிழ் அரசியலின் மோசமான மரபு, எதிரிகளை அதிகரிப்பது. அகத்திலும் புறத்திலும்இந்த எதிரிகளை அதிகரிக்கும் செயற்பாடு வளர்ந்துகொண்டு செல்கின்றது. புறத்தில் முஸ்லிம்மக்கள், இந்தியா என்று எதிரிகள் அதிகரித்திருந்தனர். அகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்குவெளியே பலர் தள்ளிவிடப்பட்டனர்.
பூநகரி கௌதாரி முனையில் உருவாக்கப்பட்ட சீனாவின் கடலட்டை பண்ணை விவகாரம்இன்று தமிழ் அரசியல் சக்திகள் மத்தியில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
“குயிலன் பிரைவேட் லிமிட்டற்” என்ற பெயரில் இலங்கை கம்பனிப் பதிவுச்சட்டத்தின் கீழ் இக் கடலட்டைப் பண்ணை பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிச்சாவேலி, யுவான்சென்எனும் இரு சீனர்களும் தம்மிக.டி.சில்வா என்ற கொழும்பைச் சேர்ந்த சிங்களவரும் இக்கடலட்டைக்கம்பனியின் பணிப்பாளர்களாக உள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறோம்என்று ஊடகங்களுக்குக் கூறியிருக்கின்றார். அவருக்கும் அனைத்தையும் சட்டப் பிரச்சினையாக்கும்சுமந்திரனின் நோய் தொற்றிவிட்டது போல தெரிகின்றது. இவ்விவகாரத்தில் மேலே துருத்திக்கொண்டுநிற்பது சட்டப்பிரச்சினையல்ல. மாறாக அரசியல் பிரச்சினையே. இதற்கு சட்ட வழிமுறைகளைவிடஅரசியல் வழிமுறைகளையே அதிகம் தேடவேண்டும்.
சீனர்களும் சிங்களவர்களும் இணைந்து பண்ணையை ஆரம்பிக்கின்றார்கள் என்றால்இது முதலீட்டுத் திட்டடமல்ல. பச்சையான ஆக்கிரமிப்பே. கோட்டாபய அரசாங்கம் முதலீட்டுத்திட்டங்களையும்ஒரு ஆக்கிரமிப்புக் கருவியாக பயன்படுத்துகின்றதா? என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது. நாவற்குழியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்ட போது சட்ட வழிமுறையால் எந்தத்தீர்வையும்காணமுடியவில்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டபோது அரசியல் வழிமுறையால் தீர்வு காண முடிந்தது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM