சீனாவை தமிழ்த்தரப்பு எதிரியாக்கலாமா ?

Published By: Digital Desk 2

12 Jul, 2021 | 02:56 PM
image

  சி.அ.யோதிலிங்கம்

தமிழ் அரசியலின் மோசமான மரபு, எதிரிகளை அதிகரிப்பது. அகத்திலும் புறத்திலும்இந்த எதிரிகளை அதிகரிக்கும் செயற்பாடு வளர்ந்துகொண்டு செல்கின்றது. புறத்தில் முஸ்லிம்மக்கள், இந்தியா என்று எதிரிகள் அதிகரித்திருந்தனர். அகத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்குவெளியே பலர் தள்ளிவிடப்பட்டனர். 

பூநகரி கௌதாரி முனையில் உருவாக்கப்பட்ட சீனாவின் கடலட்டை பண்ணை விவகாரம்இன்று தமிழ் அரசியல் சக்திகள் மத்தியில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. 

“குயிலன் பிரைவேட் லிமிட்டற்” என்ற பெயரில் இலங்கை கம்பனிப் பதிவுச்சட்டத்தின் கீழ் இக் கடலட்டைப் பண்ணை பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிச்சாவேலி, யுவான்சென்எனும் இரு சீனர்களும் தம்மிக.டி.சில்வா என்ற கொழும்பைச் சேர்ந்த சிங்களவரும் இக்கடலட்டைக்கம்பனியின் பணிப்பாளர்களாக உள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறோம்என்று ஊடகங்களுக்குக் கூறியிருக்கின்றார். அவருக்கும் அனைத்தையும் சட்டப் பிரச்சினையாக்கும்சுமந்திரனின் நோய் தொற்றிவிட்டது போல தெரிகின்றது. இவ்விவகாரத்தில் மேலே துருத்திக்கொண்டுநிற்பது சட்டப்பிரச்சினையல்ல. மாறாக அரசியல் பிரச்சினையே. இதற்கு சட்ட வழிமுறைகளைவிடஅரசியல் வழிமுறைகளையே அதிகம் தேடவேண்டும். 

சீனர்களும் சிங்களவர்களும் இணைந்து பண்ணையை ஆரம்பிக்கின்றார்கள் என்றால்இது முதலீட்டுத் திட்டடமல்ல. பச்சையான ஆக்கிரமிப்பே. கோட்டாபய அரசாங்கம் முதலீட்டுத்திட்டங்களையும்ஒரு ஆக்கிரமிப்புக் கருவியாக பயன்படுத்துகின்றதா? என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.  நாவற்குழியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்ட போது சட்ட வழிமுறையால் எந்தத்தீர்வையும்காணமுடியவில்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டபோது அரசியல் வழிமுறையால் தீர்வு காண முடிந்தது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-11#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54