தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்த ரயில் : யாழில் சம்பவம்

Published By: Ponmalar

03 Sep, 2016 | 11:52 AM
image

யாழ். ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த உத்தரதேவி கடுகதி ரயில், தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உத்தரதேவி கடுகதி ரயில் இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படுவதற்கு காங்கேசன்துறையிலிருந்து யாழ். ரயில் நிலையத்திற்கு பயணித்த போதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தண்டவாள தடுப்புக்கள் செயலிழந்ததன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்தினால் உயிரச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக சுன்னாகம் ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விபத்திற்குள்ளான ரயிலின் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33