மன்னாரில் 4 மில்லியன் ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சள் பறிமுதல்

Published By: Vishnu

11 Jul, 2021 | 12:01 PM
image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 4 மில்லியன் ரூபா பெறுமதியான 672 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மன்னார் பெரியகடை கரையோர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.

வன்னி இராணுவ தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய புலனாய்வு தகவல்களுக்கு அமைய 7 ஆவது விஜயபாகு காலாட்படையணி வீரர்களினால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பெரியகடை கரையோரத்திற்கு மஞ்சள் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகள் மற்றும் அவற்றை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட டிமோ பட்டா லொறி என்பனவும் கைப்பற்றப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள வாகனம், மூன்று படகுகள், படகுகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு இயந்திரங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08