ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார்.
1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் சிறு வயதிலேயே பொலனறுவைக்கு குடிபெயந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 17 ஆவது வயதில் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
சுதந்திரக் கட்சிக்குள் அவரை அழைத்து வந்த அன்றைய பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லீலாரத்ன விஜேசிங்க, பொலனறுவை மாவட்ட சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் செயலாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமனம் செய்திருந்தார்.
அரசியலில் பயணத்தை ஆரம்பித்த மைத்திரிபால சிறிசேன தற்போது இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருக்கின்றார்.
இன்றைய தினம் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பில் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத வழிபாட்டு வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாருடம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 65 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் அதேவேளை, தற்போது அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவது விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM