கொரோனா அச்சுறுத்தல் ! நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட , விடுவிக்கப்பட்ட பகுதிகள் !

10 Jul, 2021 | 08:23 AM
image

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின்  03 ஆம் பகுதி இன்று (10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று (10) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தின் மாதம்பே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரக்கலகம கிராம உத்தியோகத்தர் பிரிவும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருக்குபானே கிராம உத்தியோகத்தர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெற்கு பெலேன கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யடதொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் அம்பேதென்ன தோட்டத்தின் புதான பிரிவு மற்றும் யடதொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் அம்பேதென்ன தோட்டத்தின் க்ளே பிரிவு ஆகியன இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33