இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மிக மிக நெருக்கமான நல்லுறவுகளை மேற்கொண்டு வந்துள்ள பசில் ராஜபக்ஷவிற்கு, நிதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டதானது, இந்நாட்டின் மேம்பாடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் வரப்பிரசாதமேயாகுமென, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பசில் ராஜபக்ஷ நிதியமைச்சு பொறுப்பேற்றமை, குறித்து விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், எமது நாட்டு அரசின் அமைச்சரவையில் பசில் ராஜபக்ஷ இல்லாமை இருந்தமையானது, பெரும் குறைபாடாகவே இருந்ததும், மட்டுமல்லாமல்வெற்றிடமாகவும் இருந்தது. அவ்வெற்றிடமும், குறைபாடும் தற்போது நீங்கப்பெற்றிருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும் நெருக்கடிகளை நாடும், நாட்டு மக்களும் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
கோவிட் 19 தொற்று, சேதனப்பசளை விடயம், பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தலை விரித்தாடிக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய நிலையில் பசில் ராஜபக்ஷ, நிதி அமைச்சில் பொறுப்பை ஏற்றமை வரவேற்கத்தக்கதாகும். நாட்டை எவ்வகையில் மீட்டெடுக்க முடியுமென்பதை, அவரட நன்றாகவே உணர்வார். ஏற்கனவே, அவர் அமைச்சராக இருந்த வேளையில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை சகலரும் பாராட்டக்கூடிய வகையில் மேற்கொண்டிருந்தமை இந்நாடும் நாட்டு மக்களும் நன்கறிவர். அவ்வகையில் படு பாதாளத்தில் விழுந்திருக்கும் நிலையினை அவராலேயே மீட்டெடுக்க முடியும்.
இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் பசில் ராஜபக்ஷவிற்கு இருந்து வரும் நல்லுறவுகளை மென்மேலும் மேம்படுத்தி, அந்நாடுகளின் அனுகூலங்களையும் பெற்றுக்கொள்ள கூடிய அரிய வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. அவ் அனுகூலங்களையும் பசில் ராஜபக்ஷவினால் மட்டுமே முடியுமென்பதை, நான் ஆணித்தனமாக கூறிக்கொள்கின்றேன்.
பசில் ராஜபக்ஷ, சர்வதேச ரீதியில் பல்வேறு தொடர்புகளை மேற்கொண்டு, அந் நாடுகளின் பேரபிமானங்களையும் பெற்றுக்கிருக்கின்றார். அத்துடன் இந்நாட்டின் சகல தரப்பினர்களுடன் நல்லுறவுகளையும் மேற்கொண்டுள்ளார். அவரை எவருமே விமர்சிப்பது கிடையாது. பசில் ராஜபக்ஷ என்பவர் ஒரு திறமைசாலி மட்டுமல்லாது ஏனையவர்களையும் மதித்து நடக்க கூடியவர். அரசியல் சாணக்கியமிக்க அவரது சேவை இந்நாட்டுக்கு அவசியம் தேவைப்படுகின்றது.
அத்தேவையுணர்ந்து அவர் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளார். அவருடைய இப்பிரவேசமானது இந்நாட்டிற்கு ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM