(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஆளும் கட்சிக்கு தேவையான முறையில் மாற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது. அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் அது பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கே முரணாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சபையில் எடுத்துரைத்தனர்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்புவதற்காக அநுரகுமார திஸாநாயக்க எழுந்து, கேள்வியை முன்வைப்பதற்கு முன்னர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெரிவிக்கையில்,
மத்திய வங்கி அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒன்று தேவை என நான் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தொடர்ந்து கேட்டுவந்தேன். அதன் பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு பிரேரணையாக அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நாளை (இன்று) அது இடம்பெறுகின்றதா என கேட்டபோது சபாநாயகர் அதற்கு தெளிவாக பதிலளிக்காமல், நாளை சபை ஒத்துவைப்பு விவாதம் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கும் என்றே எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.
இதற்கு அநுகுமார திஸாநாயக்க, என்னால் பிரேரணை கொண்டுவந்து விவாதிப்பதென்றே கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது அரச தரப்பினால் பிரேரணை கொண்டுவருதென்று எவ்வாறு தெரிவிக்க முடியும்?. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டம் சபாநாயரான உங்கள் தலைமையில் கூடி, ஒரு தீர்மானம் எடுத்த பின்னர் அதனை செயற்படுத்துவதே உங்கள் கடமை. அவ்வாறு இல்லாமல் ஆளும் கட்சிக்கு தேவையான மாதிரி, அவர்கள் தெரிவிப்பதன் பிரகாரம் செயற்படுத்துவதாக இருந்தால் அக்கிராசனத்தில் நீங்கள் இருப்பதன் பயன் என்ன?. நீங்கள் பொதுஜன பெரமுன கட்சியில் தெரிவானாலும் சபாநாயகர் என்றவகையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது உங்கள் கடமை என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்கவின் பிரேரணையை எடுத்துக்கொள்வதாகவே கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை யார் மாற்றுவது? அதற்கு இடமளிக்க முடியாது என்றார்.
அதனைதொடர்ந்து எழுந்த சபைமுதல் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்தவார பாராளுமன்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவர இரண்டு தினங்கள் என்ற அடிப்படையில் ஆளும் எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றுக்கு அநுர குமார திஸாநாயக்கவுக்கு இடமளிக்க தீர்மனிக்கப்பட்டது. அதன் பிரகாரம் நாளை அரச தரப்பினால் பிரேரணை கொண்டுவர தீர்மானித்திருக்கின்றது என்றார்.
அதனைத்தொடந்து மீண்டும் எழுந்த சஜித் பிரேதமாச, அநுரகுமார திஸாநாயக்கவின் பிரேரணையை கொண்டுவரவே கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதை நான் உறுதியாக தெரிவிக்கின்றேன். அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதை யாராவது மாற்றுவதாக இருந்தால், அது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு முரணாகும். அதனால் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே நிறைவேற்றுங்கள். அதனை இழிவு படுத்தவேண்டாம் என்றார்.
அதனைதொடர்ந்து சபாநாயகர், இதுதொடர்பில் கட்சி தலைவர்கள் கூடி தீர்மானம் எடுப்போம் என தெரிவித்து, கட்சி தலைவர்களின் கூட்டத்துக்காக 12 மணியளவில் சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். இறுதியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரேரணையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM