முல்லைத்தீவு கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65வரையான குடும்பங்கள் தற்போதைய வரட்சியான காலநிலை காரனமாக குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் தற்போது 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் 65 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது, குறித்த கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட பொதுக் கிணறுகள், குழாய்க்கிணறுகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டன.
இதில் கூடுதலான கிணறுகள் நீரின்றி காணப்படுகின்றன. அதேவேளை குழாய்கிணறுகளும் பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. இதனால் தாங்கள் குடிநீர் மற்றும் ஏனைய தேவைக்கான நீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த குழாய் கிணறுகளை புனரமைத்து குடிநீர்க் கிணறுகளை துப்பரவு செய்து தருமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குடிநீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரை பல தடவை தொடர்பு கொள்ள முற்பட்ட போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM