(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வடக்கில் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் பிரவேசமானது இந்தியாவை சீண்டும் சித்தத்தில் அமைந்துள்ளதெனவும், இந்தியாவை சீண்டி தமிழர்களை இல்லாதொழிக்க சீனாவையும், பாகிஸ்தானையும் அரசாங்கம் தூண்டிவிடுகின்றதா என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.
தமிழ் மக்களை இன்னல்களுக்கு தள்ளும் இந்த செயற்பாடு காரணாமாக சிங்கள மக்களும் பாதிக்கப்படப்போகின்றனர். இதனால் இலங்கை சுதந்தரத்தை இலக்கப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் மீதான ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்ட கௌதாரிமுனை கடலோர பிரதேசத்தில் சீன பிரஜை ஒருவருக்கு கடலட்டை பண்ணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகர், பிரதேச செயலாளர் ஆகியோரின் அனுமதி இல்லாது நேரடியா சீன நபருக்கு கடலட்டை பண்ணை செய்ய அனுமதி கொடுத்தது யார்? எமது மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு இருக்கையில் இந்த நாட்டு பிரஜை இல்லாத ஒருவருக்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரசாங்கம் செய்ய முயற்சிப்பது என்ன? நாற்பது ஏக்கர் பரப்பில் இரண்டு காணிகளை இவ்வாறு கொடுத்துள்ளனர், அதேபோல் யாழ்ப்பாண கச்சேரியின் பழைய வளாகத்தில் சீன நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்றை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாட்டின் சட்டம் யாருக்காக பிரயோக்கிக்கப்படுகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள மீனவர்கள் மட்டுமல்ல யாழ்ப்பாணம் மீனவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் யாழ்பாணம் வந்திருந்தார், யாழ்ப்பாண செயலகத்தில் கூட்டமொன்றை நடத்தியிருந்தார், அதேபோல் அவர் மண்டைதீவில் தங்கியிருந்துள்ளார். அல்லைப்பிட்டி கரையோரங்களை சென்று பார்வையிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த பகுதிகளில் பாகிஸ்தானிய நிறுவனம் ஒன்று ஹோட்டல் கட்ட முயற்சித்த வேளையில் நாம் தலையிட்டு அவற்றை தடுத்தோம். இப்போது மீண்டும் அதே முயற்சியை பாகிஸ்தானிய நிறுவனம் மேற்கொண்டுள்ளதா என்ற கேள்வி எம்மத்தியில் எழுந்துள்ளது. பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரின் விஜயமும் அதற்காகத்தான் அமைந்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே நெடுந்தீவு, நைனாதீவு, அனலைதீவு பகுதியில் மீள் பிறப்பிக்கக்கூடிய காற்றாலை மின்நிலையங்களை சீனாவுக்கு வழங்கியிருந்தனர். இது இந்தியாவை சீண்டும் செயற்பாடாக அமைந்திருக்க வேண்டும். தமிழர்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் இந்தியாவுடனே எமது உறவுகள் இருக்கும். எனவே இந்தியாவை சீண்டி தமிழர்களை இல்லாது செய்ய சீனாவையும், பாகிஸ்தானையும் தூண்டிவிடுகின்றதா என்ற சந்தேகம் எம்மத்தியில் உள்ளது.
எமக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் இது பாரிய ஆபத்தாகும். இந்தியா எமது அயல் நாடு, தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் கிடைத்து வருகின்றது. இவற்றை நிராகரித்து சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இலங்கை அனுமதித்தால் அது பாரதூரமான விடயமாகும். தமிழ் மக்களை இன்னலுக்கு தள்ளும் இந்த செயற்பாடு காரணாமாக சிங்கள மக்களும் பாதிக்கப்படப்போகின்றனர்.
இதனால் இலங்கை சுதந்தரம் இலக்கம் போகின்றது. இதில் இருந்து மாற்றும் வேலைத்திட்டத்தில் அரசாங்கத்திற்கு கைகொடுக்க நாம் தயாராக உள்ளோம் அதனை புறக்கணிக்க வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM