(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ், கொவிட் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி நடவடிக்கைகளும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. இவ்வாறான நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை உயர்த்திய பசில் ராஜபக்ஷவை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு பெயரிடிருக்கின்றது. இதனை சிறந்த நடவடிக்கையாகவே காண்கின்றோம்.
பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வந்து பொருளாதாரம் தொடர்பான அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதொடர்பில் வியாபாரிகள் மற்றும் வர்த்தக அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என நம்புகின்றோம். அத்துடன் அவரின் வருகைக்கு பின்னர் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM