சிவலிங்கம் சிவகுமாரன்
சாமிமலை ஓல்டன் தோட்டத்துக்குள் புதிதாக ஒரு பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இதுவரை தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கவில்லை.
கடந்த வருடம் நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவ முகாம் தொடர்பில் பேசப்பட்டாலும் அது தொடர்பான வழக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருவதால் தற்போது அவ்விவகாரம் குறித்து எவரும் கதைப்பதில்லை. நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் தற்போதைய சூழலில் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
எனினும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டது இராணுவ முகாம் அல்ல , அது அனர்த்த முகாமைத்துவ நிலையமே என இராணுவதளபதி சவேந்திர சில்வா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்திருந்தார். ஆனாலும் குறித்த இடத்தில் 581 ஆவது படையணி தலைமைக் காரியாலயம் என இராணுவத்தினரால் பாதையோரமாக பெயர்க்கல்லும் நிரந்தரமாக வைக்கப்பட்டு விட்டது. இராணுவ தளபதி கூறியது போன்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்ற பெயர்ப்பலகையெல்லாம் அங்கில்லை.
இந்த சந்தர்ப்பத்திலேயே சாமிமலை ஓல்டன் தோட்டத்துக்குள் பொலிஸ் நிலையமொன்று அமைக்கப்படுவது குறித்து பேசப்பட்டு வருகின்றது. அதற்கான அனுமதி கிடைத்துள்ள அதேவேளை விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார எமக்கு தெரிவித்தார்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/kathir/2021-07-04#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM