மணலுக்கு புதைத்து இரகசியமான முறையில் யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று(ஞாயிறு) இடம்பெற்றுள்ளது.
சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக கிளிநொச்சி பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்றையதினம் பளை விஷேட பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மாங்குளம் பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினை சோதனைக்குட்படுத்தியபோது சூட்சுமமான முறையில் முதிரை மரக்குற்றிகளுக்கு மேல் மணல்களை ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்துடன் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 26 முதிரை குற்றிகள் கைப்பற்றபட்டுள்ளதுடன், குறித்த முதிரை குற்றிகள் பல இலட்சம் பெறுமதி மிக்கவை என பளை பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM