மழையால் தப்பியது 'வைட் வோஷ்'

Published By: Vishnu

05 Jul, 2021 | 10:54 AM
image

பிரிஸ்டலில் நடைபெற்ற இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியானது மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இதனால் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணியானது, இங்கிலாந்துடன் மூன்று போட்டிகளை கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது.

அதில் முதலாவதாக நடைபெற்ற டி-20 தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து, இலங்கையை வைட் வோஷ் செய்தது.

அதன் பின்னர் ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளினாலும், இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகளினாலும் வெற்றி பெற்று தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து.

இந் நிலையில் ஒருநாள் தொடரின் தீர்க்கமானதும், இறுதியுமான போட்டிய நேற்று பிரிஸ்டலில் நடைபெற்றது.

இந்த தொடரின் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் நாணய சுழற்சியினை வெற்றிகொணட இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், இலங்கையை மீண்டும் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் வழமைபோல் வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

இதனிடையே தசூன் சானக்க மாத்திரம் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதனால் 41.1 ஓவர் நிறைவில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை குவித்தது.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் டோம் குர்ரன் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அடில் ரஷித் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து பிரிஸ்டலை கடும் மழை பெய்ததால் இங்கிலாந்தின் இன்னிங்ஸின் ஆரம்பம் தாமதமானது. மழை வீழ்ச்சியடைவதற்கான அறிகுறிகளைக் காட்டாதமையினால் இங்கிலாந்து ஒரு பந்து கூட துடுப்பெடுத்தாடாத நிலையில் ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இங்கிலாந்து தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்த தொடரில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக டேவிட் வில்லி தொடரின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் நிலைகளுக்கான புள்ளிகளை இந்த தொடரின் நிறைவில் இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.

அதன்படி இங்கிலாந்து முதலிடத்தில் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐந்து புள்ளிகளை பெற்ற இலங்கை 13 ஆவது இடத்திலிருந்து 11 ஆவது இடத்திற்கு முன்னேறியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09