இலங்கையின் மாற்றத்தை பான் கீ மூன் சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறுவார்

Published By: Raam

02 Sep, 2016 | 08:15 AM
image

யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வருகை தந்த போது காணப்பட்ட சூழலையும் தற்போதுள்ள நிலைமையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நன்றாகவே இனங்கண்டு கொள்வார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கண்டு மகிழ்ச்சி காணும் அதேவேளை அந்த தகவலை சர்வதேசத்திற்கு எடுத்து செல்வார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் மீது அவர் பூரன நம்பிக்கை கொள்வார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே  அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போது இலங்கைக்கு சர்வதேச தலைவர்களின் வருகை தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமுள்ளன. இது இலங்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். 

யுத்தம் நிறைவடைந்த கையோடு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வந்தார். இதன்போது மிகவும் மோசமான நிலைமை காணப்பட்டது. ஆனால் இரண்டாவது தடவையாக வந்துள்ள பான் கீ மூன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார். 

அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் நல்லிணக்கம் தொடர்பான விடயத்தில் பாரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனை பான் கீ மூன் இனங்கண்டு கொள்வார். அதுமாத்திரமின்றி நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொள்வார்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தான தகவல்களை சர்வதேசத்திற்கு எடுத்து செல்வார். இது இலங்கைக்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமையும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02