(நா.தனுஜா)
நாட்டில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் முதலாம் கட்டத் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே குறிப்பிட்டளவான சனத்தொகையினர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு பரிசோதனைப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர வலியுறுத்தியுள்ளார்.
வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
'திரிபடைந்த டெல்டா வைரஸ் என்பது மிக இலகுவாகப் பரவக்கூடியதாகும். இது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் அல்லது ஒரு கட்டத்தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த டெல்டா வைரஸ் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்களவான சனத்தொகையினர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றவேண்டியது மிகவும் அவசியமாகும். கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலை இன்னமும் முடிவிற்குக்கொண்டுவரப்படவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM