(நா.தனுஜா)
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு நாம் வலியுறுத்தியபோது எம்மை 'துரோகிகள்' என்றும் 'நாட்டுப்பற்று அற்றவர்கள்' என்றும் கூறியவர்கள், அதேவிடயத்தை மேற்குலகம் வலியுறுத்தும்போது மாத்திரம் 'மன்னித்துவிடுங்கள் நீங்கள் கூறியதை செய்துமுடித்துவிட்டோம்' என்று கூறிக்கொண்டே உடனடியாக நிறைவேற்றுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பிமல் ரத்நாயக்க அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
'பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு நாம் கோரியபோது துரோகிகள், நாட்டுப்பற்று அற்றவர்கள், மேற்குலக நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுபவர்கள் என்றும் மாட்டைக் கொல்வது போன்று கொல்லவேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இப்போது பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தித் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மேற்குலகம் கேட்கும்போது, 'ஆம் சார், மன்னித்துவிடுங்கள் சார், ஆயிரம் தடவை மன்னிப்புக்கோருகின்றோம் சார், கூறியதை செய்துமுடித்துவிட்டோம் சார்' என்று கூறியவாறு அதனை நிறைவேற்றுகின்றார்கள்.
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் ஆகியவை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அறிவித்திருக்கிறது' என்று பிமல் ரத்நாயக்க அவரது பதிவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM