(செ.தேன்மொழி)
கொரோனா நோயாளர்களுக்காக சிகிச்சைகளை பெற்றுக் கொடுக்கும் தாதியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் , தாதியர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக, நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட வைத்தியசாலை
இதன்போது மகற்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வரும் தாதியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்கள் சிவில் உடையில் சென்றே பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பணிக்கு சமூகமளித்தமையையும் அவர்கள் உறுதிபடுத்தவில்லை.
தாதியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்பதனால் இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் சுகயீன விடுமுறையை பெற்றுக் கொண்டு , கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர்கள் தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
இதனால் வெளிக்கள நோயாளர்கள் , சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் மற்றும் ஒளடதங்களை எடுத்துச் செல்லவந்திருந்தவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இதன்போது கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் , தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM