(செ.தேன்மொழி)
மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் மரண தண்டனை கைதிகளால் ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை கைவிடப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் , சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை , ஆயுள் தண்டனையாக அறிவிக்குமாறும் வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் ஐந்து நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன் , இன்று புதன்கிழமையுடன் அது கைவிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் 200 க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் கலந்துக் கொண்டிருந்ததுடன் , இதன்போது வெலிக்கடை சிறைசாலையில் உணவு தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் கூறையின் மேல் ஏறியிருந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அவர்கள் இந்த போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
கைதிகளின் இந்த கோரிக்கை தொடர்பில் 5 மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததுடன் , அது தொடர்பில் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளரும் கைதிகளுக்கு தெளிவிப்படுத்தியிருந்தனர். எனினும் கைதிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் மீண்டும் கைதிகளுடன் கலந்துரையாடியதுடன் , அவர்களது கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு விளக்கியிருந்தனர்.அதற்கமைய கைதிகள் தங்களது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM