பசில் ராஜபக்ஷவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் ; அருந்திக்க சவால்

Published By: Digital Desk 3

30 Jun, 2021 | 04:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வருவார். அவரின் வருகை எமக்கு பெரும் சக்தி. அவருடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்காட்டுவோம் என ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

புத்தளம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், பசில் ராஜபக்ஷ பாரளுமன்றத்துக்கு வருவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில காலத்திலேயே கொவிட் தொற்று ஏற்பட்டது. இதனால் எமது நாடு மாத்திரமல்ல வல்லரச நாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்கும்போதே நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி உட்பட அமைச்சரவை சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டின் உற்பத்திகளை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவந்தோம்.

என்றாலும் கொவிட் தொற்று காரணமாக நாங்கள் எதிர்பார்த்த வேகத்தில் எமது பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னுக்குகொண்டுசெல்ல முடியாமல் போயிருக்கின்றது. இருந்தபோதும் கொவிட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன் பொருளாதாரம் தொடர்பில் சிறந்த அனுபவம் இருக்கும் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வந்து பொருளாமார அபிவிருத்தி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என நாங்கள் அவருக்கு தெரிவித்திருக்கின்றோம்.

அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் சிலர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து பேசினோம். இதன்பாது, அவர் பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தோம். அவர் எமது கோரிக்கையை நிராகரிக்கவில்லை.

எதிர்வரும் 8 ஆம் திகதி அவர் பாராளுமன்றம் வருவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அவரின் வருகை ஜனாதிபதி, பிரதமருக்கு பெரும் சக்தியாக அமையும். அதேபோன்று அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்துக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அதனால் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்து,பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியை பொறுப்பேற்பார். அவருடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்காட்டுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01