மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்

Published By: Vishnu

30 Jun, 2021 | 03:09 PM
image

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து இலங்கை வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடைய உத்தரவானது பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிவுத்தல்களுக்கு அமைவாக இந்த தடை உத்தரவு நீக்க முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மத்திய கிழக்கின் கட்டார், ஓமான் பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான  பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 01 முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கில் இருந்து வரும் பயணிகளிடையே கொவிட்-19 தொற்று அதிகரித்த போக்கு காணப்படுகின்றமையால் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதில் சிரமப்படுகிறார்கள் என்பதை கவனித்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளான, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட மேற்கண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கான பயணக்கட்டுப்பாடுகள் 2021 ஜூலை 01 முதல் 2021 ஜூலை 13 வரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந் நிலையிலேயே பல நிபந்தனைகளுக்குட்பட்டு அந்த உத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 96 மணிநேரங்கள் முன்னர் கொவிட்-19 தொற்றுக்கு எதிர்மறையான பி.சி.ஆர். சோதனை முடிவுகளை கொண்டிருக்க வேண்டும்.

பி.சி.ஆர் அறிக்கையை அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும் மற்றும் தொடர்புடைய கியூஆர் குறியீடுகளை அதில் குறிப்பிட வேண்டும்.

பயணிகள் சமர்ப்பித்த சோதனை அறிக்கைகளின் துல்லியம் குறித்து விமான நிறுவனம் திருப்தி அடைய வேண்டும்.

இலங்கை சுற்றுலா வாரியத்தின் உயிர் பாதுகாப்பு குமிழி கருத்தின் அடிப்படையில் மட்டுமே பயணிகள் தங்கள் ஹோட்டல்களை தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுதல் போன்ற பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17