ஓட்டுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பட 34 ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று காலை 8.00 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது இன்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ரயில் ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் இடம்பெற்ற மோசடிகள் உட்பட தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திடீர் ரயில்வே வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தடுக்க இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ்களை சேவைக்காக நிறுத்தியுள்ளது.
ரயில்வே தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் தடையில்லா போக்குவரத்தை வழங்க தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து டிப்போ மேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கடமைகளுக்காக பயணிக்கும் அனைத்து ஊழியர்களும் டிப்போ மேலாளர்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM