மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் : இராணுவ வீரர் பணி இடைநீக்கம்

Published By: Robert

01 Sep, 2016 | 11:11 AM
image

மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ லெப்டினன் கேர்ணல் பிரதீப் குமார நிசாங்க பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமையவே பணி இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.  

மேலும் இந்த சம்பவம் குறித்து இராணுவத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 27ம் இரவு அத்துருகிரிய பகுதியில் வைத்து பிரதீப் குமார நிசாங்கவின் மனைவி மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவரான இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். 

இந்தநிலையில் நேற்று இவர் கடுவளை நீதவான் தம்மிக்க ஹேமபால முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55