(எம்.ஆர்.எம்.வசீம்)
மின்சக்தி அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவி்டம் கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இருக்கும் திகதி தொடர்பில், எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் குறித்த பிரேரணை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 23ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்படுள்ளது.
அதன் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்ட திகதியில் இருந்து 5நாட்களுக்கு பின்னர், நிலையியற் கட்டளையின் பிரகாரம் எந்தவொரு தினத்திலும் அதனை விவாத்தக்கு எடுத்துக்கொள்ள முடியுமாகின்றது.
அதன் பிரகாரம் எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கூடும் எந்தவொரு தினத்திலும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 43பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM