(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பின் போது நேற்று திங்கட்கிழமை மாத்திரம் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று மாத்திரம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதன்போது , மட்டக்குளி பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கோடி பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு கிலோ 71 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் , அதனை கடத்த பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் தொகை பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கிராண்ட்பாஸ் பொலிஸார் பாலதுறை பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது 18 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் 54 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM