இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் டொமினிக் ப்ரக்ளர் 4 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய உபகரணங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.
பிரதமருக்கும் சுவிஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இ;ந்த உபகரணங்களை பிரதமரிடம் கையளித்தார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்ளும் நோக்கில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுவிஸ் அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கொவிட் வைரஸ் சவாலை வெற்றிக் கொள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அப்போது தான் இச்சவாலை வெற்றிக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலையில் வைத்திய உபகரணங்கள் வழங்கியமைக்கு சுவிஸ் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது அவசிமாகும்.
இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை தொடர்ந்து பலமிக்கதாக முன்னெடுத்து செல்வது பிரதான நோக்கமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இலங்கை - சுவிஸ் பாராளுமன்ற நட்பு சங்கத்தை மீண்டும் பலப்படுத்துவது அவசியமாகும்.இரு நாடுகளுக்குமிடையிலான நட்பினை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.
இதன் பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவிற்கு வழங்கப்பட்டது. நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு சுவிஸ்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு எந்நிலையிலும் உதவி புரியும் என சுவிஸ் தூதுவர் பிரதமரிடம் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM