(எம்.மனோசித்ரா)
மஹியங்கன - கெமுனுபுற பிரதேசத்தில் கொவிட் கட்டுப்படுத்தல் பணியில் ஈடுபட்ட பொது சுகாதார பரிசோதகரின் சேவைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் நேற்று ஞாயிறுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மஹியங்கனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திலுள்ள பௌத்த மதகுரு ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவருடன் தொடர்புகளைப் பேணியோர் தொடர்பில் தகவல் சேகரிக்கும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர் ஈடுபட்ட போது, சந்தேகநபர் அவரது சேவைக்கு இடையூறு விளைவித்துள்ளமை மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM