சோமாலியாவின் இஸ்லாமிய அல்-ஷபாப் குழு ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அரை தன்னாட்சி மாநிலமான கால்முடுக் நகரில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய சோமாலியாவில் அமைந்துள்ள கால்முடக்கின் விசில் நகரில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது கார் குண்டுகளைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அரசாங்க படையினர் மற்றும் ஆயுதமேந்திய உள்ளூர் மக்களுடன் கிளர்ச்சியாளர்கள் மோதலை முன்னெடுத்ததாக கால்முடக்கில் உள்ள இராணுவ அதிகாரி மேஜர் மொஹமட் அவலே ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
"கிளர்ச்சியாளர்கள் இரண்டு கார் குண்டுகள் மற்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான சண்டையால் தளத்தைத் தாக்கினர்."
"கார் குண்டுகள் இராணுவ வாகனங்களை சேதப்படுத்தின, குடியிருப்பாளர்கள் ஆயுதம் ஏந்தி இராணுவ தளத்தை வலுப்படுத்தியதுடன் அல் - ஷபாப்பை விரட்டியடித்தனர்." என்றும் மொஹமட் அவலே கூறினார்.
இந்த மோதலில் 17 வீரர்கள் மற்றும் 13 பொதுமக்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
அல் கொய்தாவுடன் இணைந்த அல் ஷபாப் சோமாலியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நாட்டின் மத்திய அரசாங்கத்தை கவிழ்க்கவும், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்தின் அடிப்படையில் அதன் சொந்த ஆட்சியை நிறுவவும் போராடி வருகிறார்.
குழுவில் இருந்து வரும் போராளிகள் பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளில் பரபரப்பான போக்குவரத்துகள், ஹோட்டல்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது துப்பாக்கி மற்றும் குண்டு தாக்குதல்களை அடிக்கடி நடத்துகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM