கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி நாளை முதல்...

Published By: J.G.Stephan

27 Jun, 2021 | 04:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தில் அஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட, 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளைமுதல் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்பு மாநகரசபையின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் வைத்தியர் தினுகா குருகே தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகர அதிகார பிரதேசத்தில் அஸ்ட்ரா செனிகா முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட, 70வயதுக்கு மேற்பட்டவர்கள், 10ஆயிரத்து 500பேர் வரை இருக்கின்றார்கள். இவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  2 மத்திய நிலையங்களில் மேற்கொ்ளள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

அதன் பிரகாரம் வடகொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு சுகததாச மைதான வெளியரங்கிலும் பொரளை, கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிருளப்பனை முகலன் வீதியில் சிதுமினி சனசமூக நிலையத்திலும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

கொழும்பு மாநகர சபையில் தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களில் இந்த தடுப்பூசியின் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, அவர்கள் வழங்கிய தொலைபேசி இலக்கங்களுக்கு covid vaccine என்ற பெயரில் வழங்கப்படும் குறுந்தகவல் ஊடாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரவேண்டிய திகதி, நேரம் மற்றும் இடம் தெரிவிக்கப்படும்.  

அத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வரும்போது, குறித்த குறுந்தகவல் அடங்கிய கையடக்க தொலைபேசியுடன் தடுப்பூசி ஏற்றும் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை எடுத்துவருவது கட்டாயமாகும். 

அத்துடன் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும்போது கையடக்க தொலைபேசி இலக்கம் ஒன்றை வழங்காமல், வீட்டில் நிலையாக இருக்கும் தொலைபேசி இலக்கம் வழங்கியவர்கள், பிரதேசத்தின் சுகாதார பரிசோதகரிடம் இதுதொடர்பாக அறிவுறுத்தி, இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06