(செ.தேன்மொழி)
அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்தமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
அங்குலான, கல்கமுவ மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய அங்குலானை பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 21, 47, 49 ஆகிய வயதுடைய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளும், கைக்குண்டு ஒன்றும், 10 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்கமுவ பகுதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது 40 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரத்தினபுரி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குழல் 12 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அனுமதிப் பத்திரமின்றி இவ்வாறான ஆயுதங்களை வைத்திருப்பது கடுமையான குற்றமாகும். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, கைக்குண்டுகளை வைத்திருக்கும் சந்தேக நபர்களுக்கு நீதிவான் நீதிமன்றங்களில் பிணை வழங்கமாட்டாது. அவர்களுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றங்களில் மாத்திரமே பிணை பெற்றுக்கொள்ள முடியும். அதனால் இவ்வாறான சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM