(எம்.மனோசித்ரா)
இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை ஏற்படவில்லை. ஆனால் நாம் அபாயம் குறித்த கவனயீனமாக செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை ஏற்படவில்லை. ஆனால் நாம் அபாயம் குறித்த கவனயீனமாக செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
டெல்டா அல்லது வேறு எந்தவொரு வைரஸாகக் காணப்பட்டாலும் சகல தொற்றாளர்களின் மாதிரிகளிலும் மரபணு பரிசோதனையை முன்னெடுப்பது நடைமுறை சாத்தியமற்றதாகும்.
எனவே எதிர்காலத்தில் டெல்டா அல்லது வேறு நிலைமாறிய வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட மாட்டார்கள் என்று கூற முடியாது. வைரஸ் பரவலுக்கான இடமளிக்கப்பட்டால் மாத்திரமே அது தீவரமாகப் பரவும். அதற்கான இடமளிக்கப்படாவிட்டால் வைரஸ் பரவாது.
எவ்வாறிருப்பினும் இலங்கையில் தற்போது பாரிய எண்ணிக்கையில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமை ஏற்படவில்லை. எனவே தற்போதுள்ள நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதே முக்கியத்துவமுடையதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM