(செ.தேன்மொழி)
வெலிக்கடை சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் அனைவரும் கீழே இறங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர், ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குறிப்பிட்டு இரு தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், இதன்போது வெலிக்கடை சிறைச்சாலையின் மரணதண்டனை கைதிகள் 12 பேர் சிறைச்சாலையின் கூரைமேல் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் அவர்கள் அனைவரும் கூரையிலிருந்து இறங்கியுள்ளனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அது தொடர்பில் கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்கள் கூறையை விட்டு இறங்கியுள்ளனர். எனினும் உணவு தவிர்ப்பை கைவிட்டார்களா? என்பது தொடர்பில், இரவு வேளை உணவு வழங்கப்படும்போதே கண்காணிக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM