(நா.தனுஜா)
ஜனாதிபதியுடன் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கொவிட் - 19 தடுப்பு செயலணிக்கூட்டத்தின் போது தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது தடுப்பூசி வழங்கல் நடைமுறையானது செயற்திறனற்றதாகக் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆகையினால் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தைப் பொறுப்பேற்று உரியவாறு முன்னெடுத்துச்செல்வதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் கேசரிக்குத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதவது,
தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளைப் பொறுப்பேற்று முன்னெடுத்துச்செல்வதற்குத் தீர்மானித்திருக்கும் நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து அதற்கான செயற்திட்டத்தைத் தயாரித்திருக்கின்றோம். அதன்படி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், மாவட்ட பொதுவைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகயில் தடுப்பூசி வழங்கல் மையமொன்று தொழிற்படும். அவை வாரநாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் இயங்கும். அதனூடாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தத் தடுப்பூசி வழங்கல் நடைமுறையின்போது முன்னுரிமை வழங்கப்படும்.
நாட்டில் ஏற்கனவே 600,000 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் அதேவேளை, எதிர்வரும் ஜுலை மாத ஆரம்பத்தில் 6 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும். எனவே அவற்றை செயற்திறனான முறையில் வழங்கவேண்டியது அவசியமாகும்.
அதேவேளை ஏற்கனவே தொழிற்பட்டுவரும் சுகாதாரப்பணிமனையின் தடுப்பூசி மையங்கள் வழமைபோன்று தொழிற்படும். அவற்றுக்கு மேலதிகமாகவே எமது செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன்மூலம் நாளொன்றில் சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்குத் தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM