பஷில் தேசியப்பட்டியல் எம்.பியாவதில் சிக்கல்..?

Published By: J.G.Stephan

26 Jun, 2021 | 01:56 PM
image

(ஆர்.ராம்)
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக தலைவரும், தேசிய அமைப்பாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் தனது கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் உறுப்புரிமை ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசம் செய்யவுள்ளதாகவும், அதற்குரிய இறுதிக்கட்ட கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாகவும் ஆளும் தரப்பின் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பஷில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினைப் பெற வேண்டுமாயின் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்க கிடைத்திருந்த 17தேசியப்பட்டியல் ஆசனங்களில் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் பதவி விலகுவதன் ஊடாக அப்பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கேட்டபோது, தேசியப்பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப்பட்டியில் பெயரில்லாத ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில்  99ஆவது சரத்தின் ஏ பிரிவில் தேசியப்பட்டில் ஆசனத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் பற்றிய ஏற்பாடு காணப்படுகின்றது.

அதனடிப்படையில் தேசிப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்படுபவர்களின் பெயர்கள் வேட்புமனுத்தாக்கலின்போது பெயரிட்டிருக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையில் நாடாளவிய ரீதியில் உள்ள 22தேர்தல் மாவட்டங்களில் ஏதாவதொன்றில் போட்டியிட்டவர்களின் பட்டியலில் காணப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இரண்டு பட்டியிலிலும் பெயர் இல்லாத ஒருவர் தேசியப்பட்டில் ஆசனத்திற்கு நியமிக்கப்பட முடியாது. அவ்வாறு நியமிக்கப்படுவதானது அரசியலமைப்புக்கு முரணானதாகும்.

இதனைவிடவும், இறுதியாக பாராளுன்ற தேர்தல் நடைபெற்ற போது நீங்கள் குறிப்பிட்ட நபர்(பஷில் ராஜபக்ஷ) இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தமையால் அப்போதிருந்த சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அவரால் தேசியப்பட்டியலில் பெயரை இணைத்துக்கொள்ளவும் முடியாது.

ஆகவே இங்கு நீங்கள் குறிப்பிடும் (பஷில்) நபராக இருக்கலாம் வேறு யாராவதாகவும் இருக்கலாம் மேற்படி சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான முறைமையையே கண்டறிய வேண்டும் என்றார்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கையில், தேசியப்பட்டியலில் பெயர் இல்லாத ஒருவர் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்வதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை. அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றச் சட்டம் இதுபற்றிய ஏற்பாடுகள் தெளிவாக உள்ளன. இரண்டையும் தனித்தனியான விடயங்களாக பார்க்காது, ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்திப்பார்க்கின்றபோது இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

அதனடிப்படையில், தேசியப்பட்டியலில் பெயரில்லாத ஒருவர் முதலாவது சுற்றில் அதாவது முதலாவது தேசியப்பட்டியல் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட முடியாது. விரிவாக கூறுவதாயின், குறித்தவொரு கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு அமைவாக முதலில் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள். அதன் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவர் இராஜினாமாச் செய்வதன் மூலமாக புதிய பிரதிநிதியாக பட்டியலில் இல்லாத ஒருவர் கூட முன்மொழியப்படலாம். அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை என்று குறிப்பிட்டார்.

அதேநேரம், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஒருவர் (அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) கடந்த ஆட்சிக்காலத்தில் சரத்பொன்சேகா தேசியப் பட்டியல் உறுப்பினராக உள்வாங்கப்பட்டார். அதன்போது தற்போதுள்ள சட்டங்கள் தான் அமுலில் இருந்தன. ஆனால் அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று கூறியுள்ளார்.

இதேவேளை,கட்சியொன்றின் சார்பில் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு புதிதாக பட்டியலில் இல்லாத ஒருவரை நியமிக்க வேண்டுமாயின் ஏற்கனவே பட்டியலிடப்பட்டவர்கள் அனைவரிடத்திலும் இராஜினாமாக் கடிதங்களைப் பெற்று பின்னர் மத்தியகுழுவில் குறித்த நபரை ஒருவர் முன்மொழிந்து பிறிதொருவர் வழிமொழிந்து அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பும் மரபு ரீதியான முறையொன்றும் பின்பற்றப்படுவதாக தமிழ்க் கட்சியொன்றின் பெயர் குறிப்பிட விரும்பான முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் பார்க்கின்றபோது தேசியப்பட்டியல் உறுப்புரிமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான  உண்மையான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்ற விமர்சனங்கள் நீடித்துக்கொண்டிருக்கையில் தற்போது அற்கான உறுப்பினர்களை நியமிக்கும் சட்ட ஏற்பாடுகளிலும் முரண்பாடுகள் இருக்கின்றமை வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09