(எம்.மனோசித்ரா)
குற்றவிசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்னின்று செயற்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு அசேல சம்பத் கைது செய்யப்பட்டதையடுத்து, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்து எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
சமூக மற்றும் சிவில் செயற்பாட்டாளரான அலேச சம்பத் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவே கூறுகின்றனர். அவரது உரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் முன்னிற்போம். அவருக்காக ஐக்கிய மக்கள் சக்தி இலவசமாக சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும்.
சகல இலங்கை பிரஜைகளுக்கும் அவர்களது மனசாட்சிக்கு அமைவாக பேசுவதற்கு உரிமை உண்டு. அந்த உரிமையை அனுபவிப்பதற்கான சுந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் எப்போதும் உறுதியுடனிருப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM