கொவிட் தொற்றினால் உயிரிழந்த எச். டி. ரோஹித்த என்சலம் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் அனுதாபம் தெரிவிப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கொழும்பு மாவட்டத்திற்கான பணிப்பாளர் எச். டி. ரோஹித்த என்சலம் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு கொத்தாலவல பாதுகாப்பு பல்லைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 24.06.2021 அன்று காலமானதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த காவத்த தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் கடந்த சில நாட்களாக எச்.டீ. ரோஹித்த என்சலம் ஈடுபட்டு வந்தார். அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கோ நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்கள் எவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டிராத நிலையில், கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்காக கடற்றொழிலாளர்களுடன் நெருங்கி செயற்பட்டு வந்த போதே அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், 1986ம் ஆண்டு கடற்றொழில் பரிசோதகராக சேவையில் இணைந்து கொண்ட ரோஹித்த 2008ம் ஆண்டில் உதவி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். திருமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் உதவி பணிப்பாளராக கடமையாற்றியுள்ள அவர் இறக்கும் போது கொழும்பு மாவட்டத்திற்கான உதவி பணிப்பாளராக கடமையாற்றினார். 59 வயதான அவர் எதிர்வரும் 2021.07.30ம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறவிருந்தமையும் குறிப்பிடதக்கது.
அன்னாரது மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவரின் அலப்பரிய சேவையை நினைவுகூர்நததுடன், அமைச்சின் ஊழியர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் சார்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அன்னாரின் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM