கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் 2ம் நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகளை இன்றைய தினம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை இரண்டிலும் சுமார் 3,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிற்கான தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவினால் இராணுவ தளபதிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்க அமைவாக தடுப்பூசி ஏற்றம் பணிகள் இன்று ஆரம்பமாகியது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியின் கோரிக்கைக்க அமைவாக இராணுவ தளபதியின் மயற்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதிக்கு அமைவாக இன்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் சேர்ந்த சுமார் 3000 பணியாளர்களிற்கு குறித்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் முதல் கட்டமாக தேவைப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசா்ஙக அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அண்மையில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM