பங்களாதேஷில் மூன்று உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் இருந்து சீனா விலகியுள்ளது. திட்ட செலவுகளை அதிகரிக்கும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் வெளிவந்த நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கான இந்த திட்டமானது காசிப்பூர் - ஜாய்தேபூர் தொடக்கம் தலைநகர் டாக்கா அருகேயுள்ள பப்னா வரையில் கலப்பு பாதை இரட்டைக் ரயில்பாதையை அமைப்பதாகும்.
மேலும் மீட்டர் கேஜ் பாதையை அகவுரா பகுதியிலிருந்து சில்ஹெட் பகுதி வரையிலான மாற்று திட்டமும் செயல்படாது என சீன ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று திட்டங்களுமே இரு அரசுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாகும். மற்றுமொரு சர்ச்சையாக சீனாவே சீன ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்தியும் சர்வதேச விலைமனுகோரல் விதிமுறைகள் பின்பற்ற வில்லை என்றும் கூறப்படுகின்றது. அது மாத்திரமன்றி இந்த நிறுவனங்கள் பல்வேறு சாக்குப்போக்குகளில் திட்டத்தின் காலத்தை நீடிப்பதன் மூலம் செலவினங்கள் அதகரித்துள்ளதாக டாக்கா செய்திகள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே மேற்கூறிய ரயில்வே திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைக்குமாறு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டுள்ளார். பங்களாதேஷ் ரயில்வே அமைச்சு விசேட குழுவை அமைத்து செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தை முன்வைத்ததுள்ளது.
பத்மா பாலத்தின் இரு முனைகளிலும் ரயில் பாதைகள் அமைத்தல் மற்றும் சிட்டகாங் - கர்ணாவுலி ஆற்றின் அடிப்பகுதியில் தொட்டிகள் அமைத்தல் ஆகிய திட்டங்களையும் சீனா முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்திலும் பெரும் செலவுகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM