இன்னும் கட்டுமானத்தில் உள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று மாலை நடந்த வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
19 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டர் சைக்கிளொன்றும் காரொன்றும் அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்து பயணத்த வேளையில் நேற்றிரவு 7 மணியளவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதனையடுத்து இரு வாகனங்களும் தீப் பிடித்து எரிந்துள்ளதுடன், மோட்டார் சைக்களில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் ஐவர் காரில் பயணத்துள்ளதுடன், அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியமை மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் கூறியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM