(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்கப் போவதில்லை என சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுற்றாடல்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்ப்பான பிரச்சினை எம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே இந்த பிரச்சினையை அமைச்சரொருவர் மீது மாத்திரம் சுமத்துவது பொறுத்தமற்றது.
வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவை தீர்மானம் எடுக்குமாறு அமைச்சரவை அனுமதி வழங்கியது. வாழக்கை செலவு கூட்டத்தில் அமைச்சரவை , ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட சகலரும் கலந்துகொண்டனர். இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மாறாக அமைச்சர் உதய கம்மன்பில இந்த தீர்மானத்தை தனித்து எடுக்கவில்லை. எனவே அவருக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM