ஈரான் நாட்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி இவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி ஜனாதிபதி பதவியிலிருந்து வரும் ஆகஸ்ட் மாதம் விலக உள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி இஸ்லாமிய குடியரசு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரான் அணுவாயுத சோதனைக்கு பல ஆண்டு காலமாக அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்படும் நிலையில், புதிதாக ஈரான் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள இப்ராஹிம் ரைசி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தான் ஜோ பைடனுடன் ஆலோசிக்க விரும்பவில்லை என்றுள்ளார். இதனையடுத்து ரைசி அமெரிக்காவில் நுழைய பைடன் அரசு தடை விதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை தடை விதிக்கப்படுமானால் அமெரிக்க அரசால் தடைவிதிக்கப்பட்ட முதல் ஈரான் ஜனாதிபதி என்கிற பெயரை ரைசி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM