பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை கூடவுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளை இன்றும் மற்றும் நாளையும் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய இன்றைய தினம் (22) இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்த) சட்டமூலம் மற்றும் காணி எடுத்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஆகியன விவாதத்துக்கு எடுத்தக்கொள்ளப்படவிருப்பதாக பராளுமன்ற செயலாளர் நாயகம் திரு.தம்மிக தஸநாயக தெரிவித்தார்.
இந்த விவாதம் மாலை 4.00 மணிவரை நடைபெற்று அது தொடர்பான வாக்கெடுப்பும் இடம்பெறும்.
இன்று காலை 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நாளை 23 ஆம் திகதி உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான 2 ஒழுங்குவிதிகளும், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொவிட்19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
அன்றையதினம் காலை 10.00 முதல் முற்பகல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 வரையான நேரம் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காவும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM