முறிகிறதா மொட்டு?

Published By: Gayathri

22 Jun, 2021 | 06:34 AM
image

கார்வண்ணன்

கொழும்புக்கு அப்பால் எரிந்துப்போன கப்பல் விவகாரத்துடன் கொழும்பு அரசியலில் பற்றிய தீ இப்போது எரிபொருள் விவகாரத்தினால் இன்னும் சுவாலை விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. கப்பலை உள்ளே அனுமதித்தது ஏன்? ஆபத்தான கப்பல் உள்ளே வரும் வரை கண்ணை மூடிக் கொண்டிருந்தீர்களா? என்று அரசாங்கத்தைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்படி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு, இப்போது எரிபொருள் விலை அதிகரிப்பு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல அமைந்திருக்கிறது.

கொரோனா தொற்றுடன், தூங்கிக் கிடந்த அரசியல் களத்தை, தட்டியெழுப்பி தங்களின் வித்தையைக் காட்டுவதற்கு, இதைவிடச் சரியான தருணம் யாருக்கும் வாய்க்காது. கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டனவோ இல்லையோ ஆளும்கட்சிக்குள் தோன்றியிருக்கின்ற குத்துப்பாடுகள்தான் இப்போதைய அரசியல் அரங்கின் பிரதான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைக்கமைய, அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்தார். 21 மாதங்களுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு என்ற பீடியையுடன் இதனை அறிவித்து சமாளித்து விடலாம் என்று உதய கம்மன்பில நினைத்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் வழக்கம்போல கொரோனா நேரத்தில் மக்கள் பயணக் கட்டுப்பாட்டுக்குள் பட்டினி கிடக்கின்ற நிலையில், எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றது என்றும், அதனை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் குரல்கள் எழுப்பின.

இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. ஏனென்றால், விலைவாசி அதிகரிக்கும்போது எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது வழக்கம். அதனையும் செய்யாவிட்டால் அவர்களின் இருப்பை மக்கள் அறிய வாய்ப்பும் கிடைக்காது.

இந்த முறை திரியைப் பற்றவைத்தவர் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் பொதுச்செயலாளராகப் பதவி வகிப்பவர்.

அவர், கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடன்கூடிய அறிக்கை ஒன்றில், இந்த விலை அதிகரிப்பை கண்டித்ததுடன், இந்த விலை அதிகரிப்புக்குப் பொறுப்பேற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49