(எம்.மனோசித்ரா)
வத்தளை பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் இந்திய பிரஜைகளில் பெருமளவானோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இவர்களுக்கு எவ்வாறு தொற்ற ஏற்பட்டது என்று இனங்காணப்படவில்லை என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில் ,
வத்தளை பிரதேசத்தில் இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்து தொழில்புரியும் இந்திய பிரஜைகள் பலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வத்தளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM