(எம்.சி.நஜிமுதீன்)
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான பாலத்திற்கான அடித்தளம் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கத்தால் இடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எட்வட் குணசேகர தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் இந்தியாவுடன் பாரியளவிலான உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளதாக எதிர்த்தரப்பினர் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எதிர்த்தரப்பினர் அடிப்படையில்லாது அரசாங்கத்தின்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு கால்பகுதியில் விமல் வீரவன்ச எம்.பி.யின் அமைச்சின் கீழுள்ள திணைக்களம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள யோசனையில் இலங்கை இந்திய தொடர்பிலான உறவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வீதி இ புகையிரத வீதி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் ஆசியாவின் அதிவேக நெடுஞ்சாலை பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களாக முதலீட்டு சபையும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் பொறுப்பாக்கப்படவுள்ளதாகவும் அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மீது வீண்பழியினை சுமத்தி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் மத்தியில் இடைவெ ளியை ஏற்படுத்துவதற்கே எதிர்த்தரப்பினர் முயற்சிக்கின்றனர்.எனினும் அவர்களின் முயற்றி கைகூடப்போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM